உரிமைக்குரல்கள்
,வெளியிடப்பட்டதுமதுரையில் ஒரு பார்வையற்ற பெண் தன் அம்மாவின் உதவியோடு தனது வாக்கினைச் செலுத்தும்படி வாக்குச்சாவடி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
மதுரையில் ஒரு பார்வையற்ற பெண் தன் அம்மாவின் உதவியோடு தனது வாக்கினைச் செலுத்தும்படி வாக்குச்சாவடி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
இந்த முயற்சியை முன்னெடுத்த சங்கப் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா மற்றும் பொதுச்செயலாளர் திரு. மணிக்கண்ணன் அவர்களுக்க்உம், சங்கத்தின் இத்தகைய முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்திய சங்கம் சார் மற்றும் சாராதஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.
பாரா ஒலிம்பிக் மூலம் புகழ்பெற்று, அரசின் அரவணைப்பைப் பெற்றும் அரசு உறுதியின்படி அரசுப்பணி வழங்கப்படாத மாரியப்பன் அவர்களின் நினைவும் வந்துபோனது. அவருக்குக் கிடைத்த குறைந்தபட்ச அரவணைப்புகூட விஜேஷாந்திக்கு இல்லை என்பதை நினைக்கையில் ஊனத்தில்கூட பேதம் பார்க்கும் அரசின் ஊனப்பட்ட அணுகுமுறை அறுவறுப்பாய்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்து வெற்றிபெற வைத்த கட்சி திமுக என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்கள் அதே அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்று அவர் மட்டும் அல்ல, அனைவருமே நம்பினோம்.
Phd பட்டம் பெற்றது,
கல்லூரியில் பாடம் நடத்தவா…?,
இரயிலில் மிட்டாய் விற்கவா…?
உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்…
Continue reading உலகத் தமிழர்களே! உங்களின் கவனத்திற்கு
இவ்வாறான செயல்பாடுகள் முன்னமே அமலாக்கத்தில் இருந்திருந்தால், மனவுளைச்சலால் தனது உயிரைமாய்த்துக்கொண்ட திருச்சி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நிர்மல் என்னும் பார்வையற்றவரையும், கழிப்பறை வசதியற்ற காஞ்சிபுரமாவட்ட வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யா என்னும் மாற்றுத்திறனாளி உள்ளிட்டோரை இச்சமூகம் காவுகொடுத்திருக்காது.
மதிப்பிற்குரிய அரசியல் கட்சித் தலைவர்களே! ஊடக நண்பர்களே!
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களிடையே உரையாடலினை நிகழ்த்தி, அவற்றின் சாராம்சமாக மாற்றுத்திறனாளிகள் அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்கும் சில உரிமைசார் கோரிக்கைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அரசியல் கட்சிகள் இவற்றைக் கவனத்துடன் பரிசீலித்து, தங்கள் தேர்தல் செயல்திட்டத்தில் இடம்பெறச்செய்யுமாறும், ஊடக நண்பர்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளை செய்திகளாகப் பொதுத்தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாறு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள்நலச்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக நேற்று அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முதலில் பொதுப் பிரிவில் வாய்ப்பு வழங்காமல், இட ஒதுக்கீடு இடங்களைப் பெறுவதற்கு மட்டுமே வலியுறுத்துகின்றனர். அதாவது, இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு மற்றும் அவர்களது சாதி அடிப்படையில் ஒதுக்கீடு பெறுவதில்லை. மாறாக மாற்றுத்திறனாளிகள் அவர்களின் ஊனத்தின் பெயரால் மட்டுமே ஒதுக்கீடு பெறுகின்றனர்