இத்தகைய உணர்வுள்ள பார்வ்ஐயற்றவர்கள் இருக்கும்வரை பிரெயிலும் அதன் மகத்துவமும் என்றென்றும் அழியாமல் காக்கப்படும்
கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர
எதிர்வரும் பிப்பரவரி 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இனிய நண்பர் செல்வன். பாலகிருஷ்ணன் மற்றும் அன்புத் தங்கை செல்வி. ஷியாமலா இருவரும் இருமனம் கொண்ட திருமண உறவில் இணையவிருக்கிறார்கள். இந்த நன்னாளுக்கான அழைப்பிதழை அவர்கள் தங்களின் பார்வையற்ற நண்பர்களுக்காக பிரெயிலிலும் அச்சடித்து வழங்கியிருக்கிறார்கள். அத்தோடு அச்சு அழைப்பிதழில் நிகழ்விடங்களை எளிதில் அறிய QR code முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனக்குத் தெரிந்தவரை திருமண அழைப்பிதழை பிரெயிலில் முதன்முதலில் அச்சடித்து வழங்கியவர்கள் திரு. பாண்டியராஜ் மற்றும் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜ் தம்பதிகள்தான். அதன்பிறகு நண்பர் திரு. பாலகணேசன் அவர்கள் தன் திருமண அழைப்பிதழை பிரெயிலிலும் அச்சடித்துவழங்கினார். இப்போது இவர்களும் அதே பெருமித செயலைச் செய்திருக்கிறார்கள். இத்தகைய உணர்வுள்ள பார்வ்ஐயற்றவர்கள் இருக்கும்வரை பிரெயிலும் அதன் மகத்துவமும் என்றென்றும் அழியாமல் காக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கையில் இவர்கள் மீதெல்லாம் ஒருவித பொறாமை ஏற்படுகிறது. என்ன செய்ய? இதற்காக இன்னொரு முறை திருமணம் செய்துகொள்ள முடியாதே என என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்.


திருமணத்தில் இணையவிருக்கும் இருவருக்கும் சவால்முரசு சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
***
திருமண நிகழ்வு, விருந்து மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறவிருக்கும் இடங்களுக்கான கூகுல் வரைபடங்களுக்கான இணைப்புகள் கீழே.
பெருங்குடி அருள்மிகு வேண்டிவந்த அம்மன்
ஆலயம்
https://maps.app.goo.gl/a2oQMfpsSCfGkZ1p7
புதுக்கோட்டை – திருமயம் – ராயவரம் – தெற்கு நல்லிப்பட்டி பழணீ ஆண்டவர்
வழாகம்
https://maps.app.goo.gl/TvYP321hz8UxTzjD6
Be the first to leave a comment